Skip to content
Home » 4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (27). இவரது கணவர் குலாம் ஜைதர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் சீமா ஹைதருக்கு பியூபிஜி என்ற கேமிங் செயலி மூலம் டெல்லி கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (22) என்பவர் பழக்கமானார். இந்த பழக்கம் காதலாக மாறியது. இதை தொடர்ந்து சீமா ஹைதர் தனது குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.

பின்னர் கிரேட்டர் நொய்டாவை அடைந்து அங்கு சச்சினுடன் வாழ்ந்து வருகிறார். பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு இந்திய அரசிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். குலாம் ஹைதர் தற்போது சவுதி அரேபியாவில் இருந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு தலையிட வேண்டும் என்று குலாம் ஹைதர் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டுகோள் விடுத்து உள்ளார். மேலும் கேமிங் செயலில் மூலம் இந்தியாவுக்கு வருமாறு தனது மனைவியை ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டினார். குலாம் ஹைதர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்புமாறு நரேந்திர மோடி அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைத்து உள்ளார். குலாம் ஹைதர் இந்திய ஊடகங்களின் “எதிர்பாராத ஆதரவிற்கு” நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார். அவர்கள் உதவியால் தான் தனது மனைவி குழந்தைகள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடிந்தது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!