Skip to content
Home » போகும் இடமெல்லாம் பெண்களை வீழ்த்திய பாதிரியார்… 4 பெண்கள் புகார்….

போகும் இடமெல்லாம் பெண்களை வீழ்த்திய பாதிரியார்… 4 பெண்கள் புகார்….

குமரி மட்டுமல்லாது மதுரை, சென்னை, பெங்களூரு என்று தேவாலய பணிக்காக போகும் இடங்களில் எல்லாம் இளம் பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்திருக்கிறார் பாதிரியார் பெனடிக் ஆன்றோ. ஒரு மாணவி அளித்த புகாரில்  கைது செய்யப்பட்ட பாதிரியார் குறித்து பெண்கள் துணிச்சலாக புகார் கொடுக்கலாம்.  பெயர், புகார்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை அடுத்து மேலும் நான்கு பெண்கள் பாதிரியார் மீது புகார் கொடுத்துள்ளனர். 80 பெண்களின் ஆபாச வீடியோக்கள் போலீசில் சிக்கி இருக்கும் நிலையில் ஐந்து பெண்கள் மட்டுமே இதுவரைக்கும் புகார் கொடுத்துள்ளனர்.

ku

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அடுத்த பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.  29 வயதான இந்த வாலிபர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துள்ளார்.  கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தக்கலை அடுத்த பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

இந்த நிலையில்  பாதிரியார் பெனடிக் ஆன்றோ பெண்களுடன் இருக்கும் ஆபாசமான வீடியோக்கள், புகைப்படங்கள், வலைத்தளங்களில் பரவி வந்தன.  பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இந்த ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள், ஆடியோக்கள், வாட்ஸ் அப் சாட்டிங் பதிவுகள் பரவி வந்தன . சர்ச்சுக்கு வரும்  பெண்களுடன் பாதிரியார் இப்படி ஆபாச லீலைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது .

kk

பாதிரியார் மீது பேச்சுப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.  தன்னைப் பற்றிய ஆபாச வீடியோக்கள் பரவி வந்ததுமே பாதிரியார் தலைமறைவானார்.  இரண்டு தனிப்படைகள் தீவிரமாக தேடுதல் நடத்தி வந்த நிலையில், அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார் பாதிரியார்.  கடைசியாக நாகர்கோவில் பண்ணை வீட்டில் அவர் தலைமறைவாக இருக்கிறார் என்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதையைடுத்து  போலீசார் அங்கு நேற்று  அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலீசாரிடம் பாதிரியாரின் லேப்டாப் சிக்கி இருக்கிறது.  அதை ஆய்வு செய்தபோது 80க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்திருக்கின்றன. கன்னியாகுமரி மட்டுமல்லாது மதுரை, சென்னை, பெங்களூரு என்று தேவாலய பணிக்காக போகும் இடங்களில் எல்லாம் இளம் பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்திருக்கிறார் பாதிரியார் பெனடிக் ஆன்றோ என்பது தெரியவந்திருக்கிறது.

இதனால்,  பாதிரியார் ஏராளமான பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் இதன் மூலம் நினைக்கின்றனர்.   பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.  பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் புகார் அளிப்பவர்களின் பெயர், விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.  ஆன்லைன் மூலமாக கூட புகார்களை அனுப்பி வைக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!