தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிகை துறையிலிருந்து ஓய்வு பெற்ற நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத் திற்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,
தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் மரு.இரா.வைத்தியநாதன், கூடுதல் இயக்குனர்கள் ச.செல்வராஜ், முனைவர் ஆர்.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
