தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் கணேஷ்குமார் (28) மதுபாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 14-ம் தேதி இரவு 3 நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், 3 பேரும் சேர்ந்து அவரது தலையில் மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த கணேஷ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே நண்பரை மதுபாட்டிலால் அடித்துகொலை
