Skip to content
Home » 5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…

5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா ( 70). ராதா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற தனது மனைவியை பார்க்க ரஜினி சென்று இருந்தார். வீடு பூட்டப்பட்டு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படாததால் ரஜினி, தன்னிடம் இருந்த இன்னொரு சாவியால் கதவை திறந்து பார்த்த போது, வீட்டில் தாயார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ரஜினி ஜெயபுரம் போலீசர்க்கத் தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ராதாவுக்கு சொந்த ஊர் லால்குடியை அடுத்த ஆலம்பாக்கம் என்பதும், ஆலம்பாக்கத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் மனைவி காந்தி முத்தரசநல்லூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்ததும், அப்போது ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டதால் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், காந்தியை பிடித்து நடத்திய விசாரணையில், நகைக்காக ராதாவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காந்தியை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். பின்னர், அவரை கைது செய்த ஜியோபுரம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!