அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் இறுதி சடங்கு மையத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குளிர்சாதன வசதியின்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளார்க் மோர்கன்-ஜோஹனா மோர்கன் தம்பதியரால் நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தின் உரிமத்தை நகர நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உடல்களை கைப்பற்றிய போலிசார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
