நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், திருச்சி மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த தலா 10 பேர் உள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த 11 பேர், மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 பேர், கிருஷ்ணகிரி மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா 4 பேர் நேபாளத்தில் சிக்கி உள்ளனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த ரத்தினகுமார், பூங்குழலி உள்ளிட்ட 5 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
