Skip to content
Home » பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

  • by Senthil

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரன் பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வர்ஷன் (6). இவர் வீட்டின் வெளியே நின்றபோது  விஷப்பாம்பு ஒன்று வர்சனை கடித்துள்ளது. அப்போது சிறுவன் பயத்தில் அலறி துடித்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர்கள் உடனடியாக சிறுவன் வர்ஷனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் வர்ஷன்  சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!