கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2022-23 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களில் சிதலமடைந்த சாலைகள் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று நாகம்பள்ளி,புங்கம்பாடி, அம்மா பட்டி ஊராட்சி உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் தமிழக முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் சாலை புதுப்பிக்கும் பணிக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.