தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது. அரசு தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒரு நாள் முழுவதும் 4 காட்சிகளை ரத்து செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு எடுத்து அறிவித்துள்ளது. 2 காட்சிகள் மட்டுமே ரத்து செய்வதின் மூலமாக ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் அவர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் 1,126 திரையரங்குகள் உள்ளன என்றும் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.