இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகின்றனர். சிதம்பரம் நாடாளுமன்ற த்தில், 7,53,643 ஆண் வாக்காளர்களும் 7, 66,118 பெண் வாக்காளர்களும் 86 மூன்றாம் பாலின வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 15,19,847 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். நாளை குன்னம் சட்டமன்றத்தில் 320 வாக்கு சாவடிகளிலும், அரியலூர் சட்டமன்றத்தில் 306 வாக்கு சாவடிகளிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் 290
வாக்குச்சாவடிகளிலும், புவனகிரி சட்டமன்றத்தில் 283 வாக்குச்சாவடிகளிலும், சிதம்பரம் சட்டமன்றத்தில் 260 வாக்குச்சாவடிகளிலும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்தில் 250 வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து மொத்தம் 1709 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். வாக்குப்பதிவினை நடத்திட தேர்தல் ஆணையம் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரால் 1709 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 8259 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் குன்னம் சட்டமன்றத்தில் 1536 அலுவலர்களும், அரியலூர் சட்டமன்றத்தில் 1468 அலுவலர்களும், ஜெயங்கொண்டத்தில் சட்டமன்றத்தில் 1392 அலுவலர்களும், புவனகிரி சட்டமன்றத்தில் 1360 அலுவலர்களும், சிதம்பரம் சட்டமன்றத்தில் 1248 அலுவலர்களும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத்தில் 1200 அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சிகள் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை வழங்கப்பட்டது மேலும் அவர்கள் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடிகளுக்கான பணியாணையும் இன்று அந்தந்த இறுதி கட்ட பயிற்சி நடைபெற்ற முகாம்களில் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் வாக்குச்சாவடி அதிகாரி மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒன்று முதல் நான்கு வரை உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற தேவையான அனைத்து ஆவணங்களையும் கையாளும் முறை மற்றும் வாக்குப்பதிவை நடத்தும் முறை மேலும் வாக்குப்பதிவு குறித்து மேல் அதிகாரிகளுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கும் முறை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் மாதிரி வாக்கு பதிவு நடத்த வேண்டிய பயிற்சி மற்றும் வாக்குப்பதிவு முடிந்த பின்பு வாக்கு பெட்டிகளை சீல் வைத்தல் ஆவணங்கள் சரிபார்த்து தனியாக சீல் வைத்தல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது. பயிற்சி முடிந்து பணியானை பெற்ற அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.