Skip to content

திருச்சி இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

கரூரில் இருந்து திருச்சிக்கு  குட்கா கடத்தப்படுவதாக திருச்சி எஸ்.பியின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார்  ஜீயபுரம் பகுதியில் வாகன தணிக்கை நடத்தியபோது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள  குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றை ஜீயபுரம் போலீசில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.  ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அப்போது தனிப்படையினர் பிடித்தபோது கைப்பற்றிய குட்காவின் மதிப்புக்கும் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்தபோது காட்டப்பட்ட மதிப்புக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.

இது தொடர்பாக  விசாரணை நடத்த எஸ்.பி. வருண் குமார் உத்தரவிட்டார். இதில் தவறு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே  ஜீயபுரம் இன்ஸ்பெக்டர்  குணசேகரன் மற்றும் 4 போலீசாரை  ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. வருண்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!