சென்னை எம்.கே.பி. நகரில் அன்குஷ் என்பவரின் கடையில் நகை வாங்குவது போல் நடித்து, தங்க நகைகளை திருடிச் சென்ற ரெஹானா (50) கைது. நகை இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது சுமார் 49 சவரன் தங்க நகைகள் குறைவாக இருந்ததால் அன்குஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த இரு மாதங்களாக 20 முறைக்கு மேல் கடைக்கு வந்த அவர் சிறிய அளவில் நகையை வாங்கி, நகைகளை திருடிச் சென்றது அம்பலம். அவரிடம் இருந்து சுமார் 24 சவரன் நகைகளை மீட்ட போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
