Skip to content

தொழிற்பயிற்சி பள்ளியில் மரக்கன்று நட்டார் ….. அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் இன்று மரம்நடு விழா கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் திருச்சி வனத்துறை சார்பாக மா, பலா, தென்னை ,முருங்கை, வில்வம், வேம்பு,அரசு உட்பட சுமார் 450 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பேரூராட்சியின் சார்பில் நடப்பட்டது.

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழிற் பயிற்சி பள்ளி மாணவ

மாணவிகளுடன் மரக்கன்றுகளை  நட்டார். மேலும் இந்த நிகழ்வில் கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல், கூத்தைப்பார் பேரூராட்சி துணைத் தலைவர் பழனியாண்டி, திருச்சி வனசரக அலுவலர் ரவி ,சரக வன விரிவாக்க அலுவலர் சரவணகுமார் உட்பட கூத்தைப்பார் பேரூராட்சி கவுன்சிலர்கள், கூத்தைப்பார் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!