Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் மகேஷ் தொகுதியில்……வயல்காடாக மாறிய சாலைகள்…. நாற்று நடும் போராட்டம்

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை (வார்டு எண் 44, 45 ) மூகாம்பிகை நகர், புது அய்யனார் தெருவில்  கடந்த 5 ஆண்டுகளாக  தார்ச் சாலை போடப்படவில்லை.கடந்த 2 நாட்களாக திருச்சி பகுதியில் பெய்த மழையால் இங்குள்ள   சாலைகள்  நெல் நாற்று  நடவு செய்யும் அளவுக்கு சேறும் சகதியுமாக மாறிவிட்டது.

குழந்தைகள், பெரியவர்கள், பள்ளிக்குச் செல்பவர்கள்

பள்ளியில் சர்ச்சைப் பேச்சு' - அனைவருக்கும் பாடமாக இருக்கும் வகையில்  நடவடிக்கை; அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி | Minister Anbil Mahesh says  stringent actions will ...

இச்சாலையில் செல்ல முடியாமல் வழுக்கி விழுந்தும், விபத்துகளில் சிக்கியும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஒருவர் நடந்து செல்லும்போது இன்னொரு  காரோ,  டூவீலரோ வந்தால் நடந்து போகிறவர்  சேற்றில் குளித்து விட்டுத்தான்  வீடுபோய் சேருகிறார்கள். அலுவலகங்கள்,  கல்வி நிலையங்களுக்கு செல்பவர்களின் நிலைமை   மோசமாகி விடுகிறது.
சாலையில் நடந்து செல்லும்போது வாகனங்கள் வந்தால்  ஒதுங்கி, பதுங்கி நிற்க வேண்டி உள்ளது. வாகனங்கள் சென்ற பிறகே பாதசாரிகள்  அந்த சேற்று சாலையில் கடந்து போக வேண்டி இருக்கிறது.
இதுபற்றி  சம்பந்தப்பட்ட  கவுன்சிலர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இத்தனைக்கும் இந்த பகுதி  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேசின் தொகுதிக்கு உட்பட்டது என்பது தான் ஹைலைட்.  அமைச்சரின் தொகுதியிலேயே 2 நாள் மழைக்கு சாலைகள்  வயல்காடாக மாறி விட்டது.
உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்காவிட்டால் இன்னும் ஒரு வாரத்தில் இங்கு நாற்று நடும் போராட்டம் நடத்துவோம் என அந்த பகுதி மக்கள் அறிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!