Skip to content

மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…

  • by Authour

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்ய துவங்கியுள்ளனர். சென்னையில் முந்தைய ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கார் உரிமையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய கார்கள் பழுதாகி, பல லட்சம் ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டது. இதனால் சமீப காலமாக, அதி கனமழை என்ற அறிவிப்பு வந்த உடனே மக்கள் உஷாராகியுள்ளனர்.  வேளச்சேரி பாலங்களில் இடம் பிடித்து கார்கள், வாகனங்களை நிறுத்த தொடங்கி விடுகின்றனர். நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மழைநீரில் கார்கள் மூழ்குவதை தடுக்க உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!