Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம்…

கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21 வயது மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலேகா 20 வயது இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்., இந்நிலையில் ஸ்ரீலேகா வின் உறவினர்கள் ஆனைமலை உபிலியர் வீதி திமுக கவுன்சிலர் சாந்தி மற்றும் அவரது கணவர் சதீஷ் குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், வீட்டிற்க்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பையும் துண்டித்து அராஜகம் செய்து வருவதாகவும், நேற்று கத்தியை காட்டி கடுமையாக மிரட்டியதாகவும் கூறி தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் வெளியில் செல்வதற்கே அச்சமாக உள்ளது எனக் கூறி தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் கொலை மிரட்டல் விடுத்து வரும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம் அடைந்து மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!