Skip to content

புதுகையில் கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி…

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டு பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் , மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , துணை மேயர் எம்.லியாகத்தலி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (த.மா.க.வா) கே. செல்வக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா , வட்டாட்சியர் பரணி ,மாநகராட்சி உறுப்பினர்கள் லதாகருணாநிதி, ராஜா முகமது , மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!