தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 1,936 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு நடந்த 56 நாட்களில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்களை தேர்வாணைய இணையதளத்தில் ரிசல்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.