முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர
மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ம் தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ச்சியாக 5,6,7,8 ஆகிய தேதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் இரவு 7:00 மணிக்கு கேடயம், அன்ன வாகனம், பூத வாகனம், ரிஷப வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று மகா அபிஷேகம் மற்றும் இரவில் யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருத்தேருக்கு முகூர்த்த கால் நடும் விழா மற்றும் அபிஷேகம் நடந்தது.
நாளை( ஞாயிற்றுக்கிழமை )மகா அபிஷேகம் மற்றும் மாலையில் குதிரை வாகனத்தில் அம்மன் திரு வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர் திருவிழா நாளை மறுநாள் ( திங்கட்கிழமை) கோலாகலமாக மிதுன லக்னத்தில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். முன்னதாக காலை 6 மணிக்கு அபிஷேகம் மற்றும் மூலஸ்தானத்திலிருந்து தாயார் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 13-ம் தேதி( செவ்வாய்க்கிழமை) விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த சித்திரை தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தெய்வீக மகா சபை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.