அரியலூர் மாவட்டம், இனாம் மாத்தூர், பார்பனசேரியை சேர்ந்தவர் மரியா சூசை (71). இவர் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏப்.3-ந் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவர் திடீரென சிறையினுள் மூச்சுத்திணறி மயங்கினார். அவரை மத்திய சிறை அதிகாரி மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோததித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.