Skip to content

பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு– திருச்சி க்ரைம்

வாலிபர் தற்கொலை..

திருச்சி ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் ஸ்டீபன் (வயது 33)இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்தஸ்டீபன் மன உளைச்சலை அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரர் பாக்யராஜ் ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பிரியாணி கடைக்காரர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி சாவு 

திருச்சி மே 21-திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 65)இவர் அந்த பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி முகமது காசிம் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது முகமதுகாசிம் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சுட வைத்துக் அதில் முட்டையை போட்டு கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்.பிறகு தண்ணீர் சுட்டவுடன் அந்த பாத்திரத்தை தூக்கியபோது எதிர்பாராத விதமாக கைநழுவி அவரது மார்பிலும் இரு கைகளிலும் சூடான நீர் ஊற்றப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் தீக்காயம் அடைந்த முகமது காசிம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆயுள் கைதி சாவு 

திருச்சி மத்திய சிறையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை போலீசரத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பவர் கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நேற்று நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மத்திய சிறையில் மயங்கி விழுந்தார். பிறகு அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்க்க டாக்டர் ராஜேஷ் இறந்து விட்டதாக . கூறினார். இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி விக்னேஷ் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிபன் கடைக்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

திருச்சி அரியமங்கலம் கல்லான்குத்து பகுதியை சேர்ந்தவர் சேது ( 40 ) இவர் வடக்கு உக்கடை பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் அங்கு டிபன் வாங்க வந்த இரண்டு வாலிபர்கள் சேதுவை திட்டி தாக்கியுள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் உக்கடை ஜோதிநகர் பகுதி சேர்ந்த அக்பர் பாஷா (29) அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (26) ஆகிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தையை திட்டியதாக தாக்கிய வாலிபர் கைது

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (44). இவர் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரின் தந்தையை முன்விரோதம் காரணமாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அப்துல் அஜீசை, புவனேஸ்வரன் (35) கட்டையால் தாக்கினார். இதில் வலது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரனை கைது செய்தனர் .

 

error: Content is protected !!