மீடியா நாயகன்
2015ல் உருவாக்கப்பட்டது நிதி ஆயோக் என்ற அமைப்பு . இதன் தலைவர் பிரதமர் மோடி. வருடத்திற்கு ஒரு முறை நிதி ஆயோக் கூடி ஆலோசிக்கும். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள்.
நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். கடந்த 24ம் தேதி டில்லியில்10வது நிதி ஆயோக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். கடந்த 3 ஆண்டுகளாக நடந்த கூட்டத்தில் பங்கேற்காத முதல்வர் ஸ்டாலின், இப்போது ஏன் பங்கேற்றார் என சில எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியலின் புதிய வரவுகள் எல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தன் இருப்பை காட்டிக்கொள்ள எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தவெக தலைவர் நடிகர் விஜயும் தன் பங்குக்கு ஒரு அறிக்கையை விட்டு தன் இருப்பை காட்டிக்கொண்டார்.
அவர் தொடங்கியிருப்பது பாஜகவின் பினாமி கட்சி என்பதும், பாஜகவின் ஆசீர்வாதத்தோடு தான் அவர் கட்சித் தொடங்கி, திமுகவை எதிர்ப்பதே என் லட்சியம் என்றும் முழங்கி கொண்டு இருப்பதும் தமிழ்நாடு அறிந்த செய்தி.
தன்னை யாரும் சந்தேகப்படக்கூடாது, என்பதற்காக இதோ நான் மத்திய அரசை எதிர்க்கிறேன் பார்……. பிரதமர் மோடி பெயரை சொல்கிறேன் பார் என்று மேடையில் முழங்குவார்.
பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி விட்டு வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொள்ளும் விஜய் திமுக என்று வந்தால் மட்டும் வாயை 4 முளத்துக்கு நீட்டி முழக்குவார். காரணம் அவருக்கு எழுதிக்கொடுக்கும் அதிமேதாவி பாஜக உத்தரவுப்படி அதைத்தான் செய்கிறார். எனவே அதைத்தான் இவரும் ஒரு மண்டூக மாணவனாக படித்து விட்டு போகிறார்.
அந்த வகையில் தான் இப்போது நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றதை விமர்சனம் செய்துள்ளார். அதில்………
குடும்ப சுயநலத்துக்காக தமிழக மானத்தை அடகு வைத்து மத்திய பாஜக அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி திமுக தலைமை அடைக்கலம் புகுந்துவிட்டது.நெடுஞ்சாண்கிடையாக திமுக சரணாகதி அடைந்துள்ளது என்றும் விஜய் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அறிக்கையில் விஜய் சொல்லியிருக்கிறார் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. காரணம் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று கூட அவருக்கு தெரியாது. கையெழுத்து மட்டும் போட்டு விடுவார் அவ்வளவு தான். எனவே விஜய் அறிக்கையில் கூறி இருப்பதை இன்னொரு முறை அவரிடம் கேட்டால் அவருக்கே அது என்னவென்று தெரியாது.
நெடுஞ்சாண் கிடையாக விழுந்திருந்தார் என்றால், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்னைக்கு வந்திருப்பார். ஆனால் முதல்வர் டில்லியில் அத்தனை பத்திரிகையாளர்களையும் சந்தித்து, பிரதமரிடம் என்னென்ன பேசினேன். அவர் என்ன சொன்னார் என்பதையும் விரிவாக சொல்லிவிட்டு தான் வந்து உள்ளார்.
பாஜகவிடம் சரணாகதி அடையப்போகிறவர், பாஜகவின் பரம எதிரியான காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவாரா, ? இப்படிப்பட்ட குறைந்தபட்ச அறிவார்ந்த சிந்தனைகளாவது விஜயக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் விஜய்க்கு அதற்கு வாய்ப்பு இல்ல….. காரணம் அவரது எஜமான் சொன்னபடி நடந்து கொண்டார் அவ்வளவு தான். மீடியாவுக்காக எதையாவது பேசலாம் என பேசாதீர்கள் விஜய். இது சினிமா அல்ல…… தமிழ்நாடு……. கொஞ்சம் அறிவுக்கு வேலை கொடுங்கள் ப்ரோ.
இதில் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், குமாரசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
4 முதல்வர்கள் புறக்கணிப்பு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர். அவர்களுக்கு பதிலாக மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
கடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பங்கேற்றார். ஆனால் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த ஆண்டு கூட்டத்தை அவர் புறக்கணித்திருப்பதை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
நிதி ஆயோக் கருப் பொருள்: வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்த லட்சியத்தை எட்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நிதி ஆயோக்கின் கூட்டம் நடைபெற்றது.
2, 3-ம் நிலை நகரங்களின் உற்பத்தித் துறையில் கவனம் செலுத்துவது, அந்த நகரங்களின் சேவைத் துறையில் தீவிர கவனம் செலுத்துவது, கிராமங்களில் வேளாண் துறை சாராத வேலைவாய்ப்புகளை பெருக்குவது, கிராமங்களில் குறு, சிறு தொழில்களை ஊக்குவிப்பது, நகரங்களில் முறைசாரா வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, குறு, சிறு தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது, சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிப்பது ஆகியவை குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
சர்வதேச தரத்தில் சுற்றுலா தலங்கள்: கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது 140 கோடி இந்தியர்களின் லட்சியம் ஆகும். இந்த லட்சியத்தை எட்டிப் பிடிக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைய வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் நகரங்களை கட்டமைக்க வேண்டும். போதிய உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச தரத்துக்கு இணையாக ஒரு சுற்றுலா தலத்தை உருவாக்க வேண்டும். வளர்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்மூலம் நகரங்கள் அபரிதமாக வளர்ச்சி அடையும்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அவர்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு அனைத்து மாநிலங்கள், அனைத்து நகரங்கள், அனைத்து கிராமங்கள் சமச்சீராக வளர்ச்சி அடைந்தால் 2047-ம் ஆண்டுக்கு முன்பாகவே வளர்ச்சி அடைந்த இந்தியா லட்சியத்தை எட்ட முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கொரோனா, வெளிநாடு பயணம், நிதி தரவில்லை.
போகப் போக பார்ப்போம் – நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. அங்கேயே அவர் 5 நிமிடம் நேரம் அளித்தார். அப்போதும் இதே கோரிக்கைகளை வலியறுத்தினேன்” என்றார். அப்போது செய்தியாளர்கள் உங்கள் கோரிக்கைகளுக்கு பிரதமர் என்ன பதில் கூறினார்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர், “அவர் செய்ய மாட்டேன் என்றா கூறுவார். செய்வேன் என்றுதான் தெரிவித்தார். போகப் போக பார்ப்போம்,” என்றார்.
தொடர்ச்சியாக நீங்கள் கோரிக்கை வைத்தாலும், சட்டப்போராட்டம் நடத்தியே பெற வேண்டியுள்ளது, தற்போது நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு, “ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நான் நேரில் சென்று வலியுறுத்தியதும் செய்து கொடுத்தார். அதை நினைவுபடுத்தி நன்றி கூறிய போது ‘நீங்கள் வந்து சொன்னதால் செய்தேன்’ என்றார். அதேபோல் இப்போது சொல்லியதையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்” என்று கூறினார்.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டு குறித்து… – தமிழகம் கோரிய கல்வி நிதி கிடைக்குமா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், “நம்பிக்கையுடன் இருப்போம்,” என்று பதிலளித்தார். அமலாக்கத் துறை மீதான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நீதிபதி நியாயமான தீர்ப்பைதான் தான் கூறியுள்ளார்” என்றார். பல மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அமலாக்கத் துறையால் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, “இது அரசியல் ரீதியாக நடைபெறுவது. அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம்” என்றார்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு – எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் டெல்லி வந்ததை விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “நான் வெள்ளைக் கொடி காட்டப்போவதாக பழனிசாமி கூறியுள்ளார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் உள்ளது போல் காவிக் கொடியும் இல்லை” என கூறினார். சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேசப்பட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எப்போது டெல்லி வந்தாலும் சந்திக்காமல் போவதில்லை. அதேபோல் சந்தித்துள்ளேன். அதே நேரம் அரசியலும் பேசினோம். இல்லை எனக் கூறவில்லை” என்றார்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல், மணல் குவாரி விவகாரத்தில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சொல்லி வருகிறார்களே என்ற கேள்விக்கு, “அதெல்லாம், பொய், பித்தலாட்டம். தேவையில்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர்” என்றார். இந்தக் குற்றச்சாட்டை துறை அமைச்சர்கள் மறுத்துவருகிறார்களா என்ற கேள்விக்கு, “துறை அமைச்சர்கள் இவற்றை எல்லாம் மறுத்து வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு செய்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இ்ன்னும் செய்வார்கள். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது உடனடியாக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைச்சர்கள் பலரை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் அமைந்துள்ளது.
‘தமிழகத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்துக்கான நிதியை போராடி பெறுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் தங்களிடம் தஞ்சம் அடையத்தான் வருகிறார் என்பது தெரிந்தும், திமுகவை அரசியல்ரீதியாக கொள்கை ரீதியாக எதிர்ப்பது உண்மையெனில் பாஜகவால் எப்படி இவர்களை கொஞ்சி குலாவி வரவேற்க இயலும். நாம் ஏற்கெனவே சொன்னது போல, இதுதான் இவர்கள் இருவருக்குள் உள்ள மறைமுக கூட்டின் வெளிப்பாடு. நிதி ஆயோக் கூட்ட புகைப்படத்தில் பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படுகிறது.
முன்வரிசையில் ஒருபுறம் வெளிப்படையான கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவும், மற்றொரு மறைமுகக் கூட்டணியான மு.க.ஸ்டாலினும் நிற்கின்றனர். திமுக, பாஜக இடையேயான மறைமுக கூட்டும், பேர அரசியலும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது.
மத்திய பாஜக அரசின் வஞ்சிக்கும் போக்கைக் கண்டித்து, மாநில முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு பலூன் பறக்கவிடுவதும், ஆளுங்கட்சியான போது கைகுலுக்கி காலில்விழுவதுமே கபட நாடக திமுக தலைமையின் பித்தலாட்ட அரசியலாக இருக்கிறது.
கூட்டத்துக்கு சென்றது மாநிலத்துக்கான நிதியை பெறுவதற்கு அல்ல. குடும்ப வாரிசு நிதியை காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே. குடும்ப சுயநலத்துக்காக தமிழக மானத்தை அடகு வைத்து மத்திய பாஜக அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி திமுக தலைமை அடைக்கலம் புகுந்துவிட்டது.
வரும் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தோல்வி உறுதி என்பதை அறிந்த திமுக, மத்தியில் ஆளும் பிளவுவாத பாஜகவுக்கு சாமரம் வீசியாவது காலத்தை ஓட்டலாம் என நினைக்கிறது. வரும் காலத்தில் பாஜகவுடன் நேரடி கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அந்தளவுக்கு நெடுஞ்சாண்கிடையாக திமுக சரணாகதி அடைந்துள்ளது. இந்த அவலமான திமுக அரசின் ஊழல் பெருச்சாளிகள் தமிழக மக்களால் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டு, மக்கள் ஆதரவோடு தவெக உண்மையான மக்களாட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.