திருப்பத்தூர் மாவட்டம் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி தலைமையில் மாற்றத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. மேலும் 3. 6 .2025 இன்று நடைபெற்ற முகாமில் 145 நபர்கள் கலந்து கொண்டனர் . அதில் 127 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் ஐந்து மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூபாய் 5,12,700 மதிப்பீட்டில் CMCHIS திட்டத்தின் கீழ் நவீன செயற்கை
அவையங்களை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை மற்றும் நவீன செயற்கை அவையங்களை 127 தகுதியான மாற்றத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது