Skip to content

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த பவித்ரா இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே நாட்டியம் பாடல் சிலம்பம் ஓவியம் வரைதல் என பல்வேறு கலைகளிலும் ஆர்வம் உடையவர். தான் நான்காம் வகுப்பு பயிலும் போது பரதநாட்டியம் பள்ளி அருகே சிலம்பம் கற்றுக் கொடுப்பதை பார்த்த இவருக்கு சிலம்பம் சுற்ற ஆர்வம் ஏற்பட்டு சிலம்ப பள்ளியில் சேர்ந்து தனது முயற்சியால் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இவர் தன்னைத்தானே சிலம்பம் சுருள்வாள் என அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெறச் செய்து கடந்த மாதம் மூன்றாம் தேதி கோவாவில் நடைபெற்ற மத்திய விளையாட்டு துறையின் இளையோர் விளையாட்டு போட்டி நடைபெற்ற நிலையில்

இதில் 14 வயதுக்குட்பட்டவருக்கான சிலம்பம் சுருள் வாள் வாழ்த்துக்கள் மற்றும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளார். மேலும் தேசிய அளவில் சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற வேண்டும் என்பது தனது நோக்கம் எனவும் இதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் பயிற்சியாளர் என் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். தேசிய அளவில் வெற்றி பெற்று சொந்த ஊர் வந்து அவருக்கு பெற்றோர் ஆசிரியர்கள் பயிற்சியாளர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!