Skip to content

கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில்  முட்புதரில் வீசப்பட்டுருந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக  போலீசாருக்கு அவ்வழியாக ஆடு மேய்க்கும் பணியில் இருந்த ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்ததை போலீசார் கண்டனர். இதனால்  நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சூட்கேசில் இருந்த   பெண்ணின் சடலம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி  24 மணி நேரத்தில் இறந்த பெண்னை தன்னுடன் இருந்த காதலனே கொலை செய்ததை   கண்டுபிடித்தனர்.

முதலில் சூட்கேஸ் புதியதாகவும், தங்க நிற கைப்பிடி கொண்டதாகவும் இருந்ததால், பச்சுப்பள்ளி இன்ஸ்பெக்டர் உபேந்தர் தலைமையில் போலீசார் பச்சுப்பள்ளி மற்றும் நிஜாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 75 கடைகளில் சோதனை நடத்தினர்.அதில்  கடந்த மே மாதம் 23 ஆம் தேதி பச்சுப்பள்ளியில் உள்ள ஒரு கடையில் இருந்து ஒருவர் அதை வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் அந்த நபரின் நடமாட்டம் அடையாளம் காணப்பட்டு  இந்திரம்மா காலனி அருகே நேபாளத்தை சேர்ந்த  விஜய் பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரனையில் போலீசார் விசாரனையில் நேபாளத்தை சேர்ந்த விஜய் தோஃபா (30) மற்றும் தாரா பெஹாரா (33) ஆகியோர் அவர்கள் ஊரில் இருக்கும்போதே பழகி வந்தனர். இதில் தாரா பெஹாராவிற்கு  ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இருவரும் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இதனால் இருவரும் சேர்ந்து நேபாளத்தில் இருந்து  ஏப்ரல் 4 ஆம் தேதி ஐதராபாத் வந்தனர்.

விஜய் தனது சகோதரருடன் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டு பவுராம்பேட்டையில் உள்ள இந்திரம்மா காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து  பாஸ்ட் புட் கடையை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் தாரா கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும்  கருக்கலைப்பு செய்ய விஜய் வலியுறுத்தினார். இதனால் மே 23 அன்று, காலை 5 மணிக்கு இதுகுறித்து இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில்  விஜய் தாராவை  ஒரு துணியால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர்  ஒரு பெரிய சூட்கேசை வாங்கி அதில்   உடலை அடைத்து, பச்சுபள்ளி-மியாபூர் சாலையில் உள்ள ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறினார். இதனையடுத்து போலீசார் விஜய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்திற்கு குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!