சிறையில் கைதிகள் மோதல்…
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் சுமார் 750 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இந்நிலையில் சிறை கைதிகளுக்கு தினமும் வளாகத்தில் உணவு சமைக்கப்பட்டு
வழங்கப்படுவது வழக்கமாகும் இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதிகளில் ஒருவரான சக்திவேல் என்பவர் மற்ற கைதிகளுக்கு உணவு விநியோகித்து வருவது வழக்கமாகும். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி அன்று இரவு, அபிஷேக் (வயது 20), அஷன் அலி (வயது 28), பிரகாஷ்ராஜ் (வயது 20), ஷமீர் அஹமது (வயது 22), வாழ மட்டை (எ) சச்சின் (வயது 20) சைவ சபரிராகவன் (வயது 19), நித்தின் (வயது 23) , அஜிபுதீன் (வயது 25) ஆகிய 8 கைதிகளும் தாங்களவே உணவை எடுத்துக் கொண்டனர். இதனை பார்த்த சக்திவேல் உணவுவை நீங்களாக எடுக்காதீர்கள். என்னிடம் கேளுங்கள். நான் உணவை எடுத்து கொடுக்கிறேன். நீங்கள் எடுக்க கூடாது , காலையில் ஜெயிலரிடம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால்
கோபமடைந்த 8 கைதிகளும் சட்டவிரோதமாக கூடி சக்திவேலை மோசமான வார்த்தைகளில் திட்டி, கையால் தாக்கி மிரட்டினர். அப்பொழுது அந்த நேரத்தில், மற்றொரு கைதி அய்யர் என்பவர் அங்கு வந்தார். அப்பொழுது கூடியிருந்த 8 கைதிகளை பார்த்து சக்திவேலை ஏன் தாக்கினார்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு அந்த 8 கைதிகளும்உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி அய்யர்ரை தாக்கி மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தால் சக்திவேல், அய்யருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து சிறைத் துறை அதிகாரி மணிகண்டன்க்குதகவல் தெரிந்தது. இதையடுத்து அவர் கே.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்துக்குள் கைதிகள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருசக்கர வாகனம் திருட்டு
திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் இருசக்கர வாகத்தை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். கிராப்பட்டி, தர்மா நகரை சேர்ந்தவர் நோயல் யேசு (39), ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மே 23ம் தேதி தன் இருசக்கர வாகனத்தை வேலை செய்யும் இடம் அருகே நிறுத்திவிட்டு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திரும்பிவந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து எ.புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கழிவறையில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
திருச்சியில் கழிவறையில் மயங்கி இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உறையூர், நாச்சியார் பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன் (60), திருமணமாகவில்லை. இவர் உறவினர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இவர் கழிவறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் மயங்கி கிடந்தது தெரிந்தது. அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு டாக்டர்கள் நாகராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தனியார் பஸ்சிலிருந்து விழுந்தவருக்கு காயம்
பஸ்சிலிருந்து தவறி விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதி
ஸ்ரீரங்கம், மேலூர் சாலை, வடக்கு வாசலை சேர்ந்தவர் சக்திவேல் (55), இவர் நேற்று முன்தினம் திருவானைக்கோயில் ரவுண்டானா அருகே தனியார் பஸ்சில் ஏற முயற்சித்தார். அப்போது படிக்கட்டில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேத்தனர். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.