ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், அந்த பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்த நிலையில் இன்று அவர் பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்து விஜய் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் கொள்ளை பரப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
தவெகவில் சேர்ந்த அருண்ராஜ் யார், அவருக்கு அரசியல் ஆசை எப்படி வந்தது என்பது பெரிய கதை. அருண்ராஜ் சாதாரணமானவர் இல்லை. பெரிய ஆள்….. அவர் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிடுவார் என்கிறார்கள். இதனால் தான் இவரை தவெகவில் சேர விடாமல், ஆதவ் அர்ஜூனா முட்டுக்கட்டை போட்டதாகவும், அந்த முட்டுக்கட்டையை உடைத்துக்கொண்டு புகுந்து விட்டார் அருண்ராஜ் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் அருண்ராஜ், சேலத்தில் படித்தவர்; பின்னர் சென்னையில் மருத்துவம் படித்தார் அருண்ராஜின் மனைவியும் டாக்டர். இவர் நாமக்கல்லைச் சேர்ந்தவர். பின்னர் குடிமைப்பணி தேர்வு எழுதி IRS அதிகாரியானார் அருண்ராஜ்.
அதிமுக ஆட்சி காலத்தில் மணல் தொழிலில் கொடிகட்டி பறந்தவர் சேகர் ரெட்டி. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2017ல் சேகர் ரெட்டி தொடர்புடைய இரு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த ரெய்டுக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவர் தான் இந்தஅருண்ராஜ்.
சேகர் ரெட்டி தொடர்புடைய இரண்டு இடங்களில் இருந்தும் பெருமளவு பணம் பறிமுதல் செய்யபட்டது. அதாவது புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டு காட்டாக காட்டப்பட்டது நினைவிருக்கிறதா இந்த பணத்தை பிடித்தவர் தான் அருண்ராஜ். இந்த பணம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது மட்டுமல்ல, அப்போதைய அதிமுக முக்கிய மந்திரிக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.
இந்த ரெய்டு மற்றும் பணம் விவரங்களை அனைத்தையும் தெரிந்து கொண்ட அருண்ராஜ், தமக்கு அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் தரவேண்டும் என கோரிக்கை வைத்தாராம். ஓமலூர் தொகுதியில் தாம் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் அல்லது தாம் பரிந்துரைக்கும் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ரொம்பவே நெருக்கடி தரப்பட்டதாம். இதற்கு முக்கிய மந்திரி ஒப்புக் கொள்ளவில்லை. இவா இப்போதே தன்னை பிளாக் மெயின் செய்கிறாரே என முக்கிய மந்திரிக்கு கோபமான கோபமாம்.
இதனால் திமுகவில் சில முக்கிய நபர்களை தொண்டர் கொண்ட அருண்ராஜ் சேலம் மாவட்டத்தில் சீட் கேட்டு உள்ளார். அங்கும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்த நிலையில் ரஜினி கட்சி தொடங்க போகிறார் என்றவுடன் ரஜினியை தொடர்பு கொண்டவர் தான் அருண்ராஜ். கடைசியில் ரஜினியும் கட்சி வேண்டாம் என அறிவித்து விட்டார்.
2020-ம் ஆண்டு நடிகர் விஜய், மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது வருமான வரித்துறை சோதனையில் சிக்கினார். அப்போது நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்தது. நடிகர் விஜய்யை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த ரெய்டுக்குப் போன முக்கியமான அதிகாரியும் அருண்ராஜ்தான்; இந்த சிக்கலில் பிரச்சனைகளை விஜய்க்கு சரி செய்து கொடுத்ததும் இதே அதிகாரி அருண்ராஜ்தானாம்.இதனால், அப்போது முதலே விஜய் தரப்புடன் அருண்ராஜின் நெருக்கம் தொடங்கிவிட்டது.
தன்னை பிளாக்மெயில் செய்த அதிகாரி அருண்ராஜ் குறித்து அப்போதைய முக்கிய மந்திரி தனக்கு வேண்டிய ஒரு நபர் மூலம் டில்லியில் புகார் அளித்தார். அதனால் டில்லி, நீ தமிழ்நாட்டில் இருக்க வேண்டாம் என்று பீகாருக்கு தூக்கி அடித்தது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய காலம் முதல் அருண்ராஜ், விஜய் நெருக்கம் அதிகரித்தது. டெல்லி பாஜக தலைவர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கும் அருண்ராஜ், விஜயை எப்படியும், பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்துவிடுவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.
இவரை வைத்து கொங்கு மண்டலத்தில் ஓட்டு அறுவடை செய்ய முடியும் என்பது விஜய் போடும் கணக்கு. ஆனால் தவெகவையே பாஜகவிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்பது அருண்ராஜின் கணக்கு. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.
கூட்டி கழிச்சி பாருங்க…… விஜய் பாஜகவின் பி டீம் என்பது புரியும்.