Skip to content

பொள்ளாச்சி அருகே கம்பெனி கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில்  பொதுமக்கள் அளித்த புகாரின் தனியார் தோட்டத்து உரிமையாளர் மீது வருவாய் துறையினர் நடவடிக்கை. பொள்ளாச்சி-ஜூன்-9 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவு காணியம்பாளையம் கிராமத்தில் பாலு என்பவருக்கு சொந்தமான மூணு ஏக்கர் நிலம் உள்ளது இவர் கடந்த ஒரு மாத காலமாக அவரது தோட்டத்தில் தனியார் கம்பெனி கழிவுகள் , மருத்துவக் கழிவுகள்,இறைச்சிக் கழிவுகள் கொட்டி மூடி வருகிறார் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஈக்கள் அது அளவில் பரவி வருகிறது இதனால் அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் தனது இடத்தில் ஆழமாக குழி தோண்டி கொட்டியும் கழிவுகளை தீ பற்ற வைத்து எரித்து அருகில் இருக்கும் பிஏபி வாய்க்கால் மூலம் தண்ணீர் எடுத்து ஊற்றி அனைத்து உள்ளார் ஊர் பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் நெகமம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் தோட்டத்து உரிமையாளர் பாலு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை என தெரிவித்தனர் பொதுமக்கள் கூறுகையில் கடந்த சில தினங்களாக தங்களது பகுதியில் தனியார் விவசாய நிலங்கள் தோட்டங்கள் உள்ளது தற்போது மழை பெய்து உள்ளதால் அதிக அளவில் துர்நாற்றம் ஏற்பட்டது சாலையில் செல்ல முடியவில்லை ஈக்கள் அதிகளவில் இது கருத்து ஊர் பொதுமக்கள் புகார் அளித்ததன் பெயரில் பாலு என்பவர் நிலத்தில் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

error: Content is protected !!