Skip to content

கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கீதா(51) இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் நபர் கீதாவிடம் 500 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர் கீதா பணம் தர மறுக்கவே மது பாட்டிலை எடுத்துக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து 15,000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு மூவரும் தப்பி சென்றனர் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோயம்பேடு கே 11 பேருந்து நிலைய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(31) மற்றும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (எ) சத்தியா(35) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வி(38) ஆகிய இரு பெண்கள் உட்பட மூவரை கைது செய்து அவர்களிடமிருந்து 670 ரூபாய் பணம் ஒலித்தவற்றை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ஒரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!