கரூர் அருகே உள்ள மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பணி தொடக்க விழா நடந்தது. முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி , அரசு மருத்துவர்கள், திமுக மாவட்ட, ஒன்றிய ,நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் , சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.