மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 8ம் தேதி மதுரை வந்த பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். அத்துடன் பொதுக்கூட்டத்திலும் பேசினார். தமிழ்நாட்டில் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலுக்கான பணியை இப்போதே பாஜக தொடங்கி விட்டது.
கூட்டணி ஆட்சி என கூறி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், பாஜகவையும் உடைத்து விட்டனர். ஆனாலும் அமித்ஷா மீண்டும் அடுத்த மாதம் முதல்வாரம் தமிழகம் வருகிறார். இந்த முறை அவர் கோவை அல்லது திருச்சிக்கு வரலாம் என தெரிகிறது. அப்போதும் அவர் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.