மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு மகளிர் மாநாடு மரக்கடையில் மாவட்டம் மகளிர் அணி துணைத் தலைவர் மூமீனாபேகம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் நிர்வாகிகள் தாஜ்நிஷா, வழக்கறிஞர் மசூதாமரியம், மெஹராஜ்பானுஅலிமா, பாகிஜாசபீக்கா, திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, மாநில செயலாளர்கள் பாஸ்டர் மார்க், ஹஸன் பைஜி உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் சட்டவிரோத வக்பு திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதுடன், வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,
உச்சநீதிமன்றம் தற்போதைய சூழ்நிலை தொடர வேண்டும் என்று கூறியிருக்கின்ற நிலையில் உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் வக்ஃப் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதற்கான முயற்சியை எடுக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதும், உடனடியாக நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும், சமூக வலைத்தளங்களில் பெண்களை கேலிச்சித்திரமாகவும், ஆபாசம் நிறைந்த மோக பொருளாக காட்டும் செயலிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.