வாலிபர்களிடம் செல்போன் பறிப்பு.
திருச்சி, திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை பார்க்க இருவரும் சென்று நடந்து கொண்டிருந்தனர். அப்பொழுது 2 மர்ம ஆசாமிகள் வழிமறித்து அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரேம்குமார் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சந்தேகக்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது முத்தரச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 28) ஆனந்த் பாபு (வயது 25) என்பது தெரிய வந்தது மேற்கண்ட இரண்டு பேர் சேர்ந்து பிரேம்குமார் மற்றும் அவரது நண்பரிடம் செல்போனை பறித்தது தெரிய வந்தது.
இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரன், ஆனந்த் பாபு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
டிரைவர் மாயம்
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவருக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர் நிலையில் இரண்டாவது மகன் ராஜ்குமார் இவர் ஒ.எப்.டி கேந்திர வித்யாலயா பள்ளியின் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்கள் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ராஜேஷ் குமாரின் தாய் பாத்திமா மேரி பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
ஏசி காப்பர் டியூப் திருடிய 2 பேர் கைது
திருச்சி- ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேஷாத்திரி. இவரது மகன் நிகமந் கிருஷ்ணா (வயது 25) இவர் கடந்த ஆறாம் தேதி தனது வீட்டில் உள்ள ஏசியை போட்டுள்ளார். ஆனால் ஏசி வேலை செய்யவில்லை.
பிறகு வீட்டுக்கு வெளியே ஏசி மெஷின் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு ஏசி மெஷினில் இருந்த காப்பர் டியூப் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிக்மந்கிருஷ்ணாஇந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இருந்த திருவரங்கம் கீதா புரத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் (வயது 24) பிரவீன் குமார் (வயது 27) ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர் அவர்களிடமிருந்து ஏசி காப்பர் டியுப்பைபறிமுதல் செய்துள்ளனர்.
வெவ்வேறு சம்பவம்.. திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது
திருச்சி அரியமங்கலம்ஆயில் மில் ரோடு பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அரியமங்கலம் மலையப்பன் நகரை சேர்ந்தமனோகரன் வயது 70 என்பவர் போதை பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது இதை அடுத்து போலீசார் மனோகரனை கைது செய்து அவரிடமிருந்து 17 கிலோ ஹான்ஸ் விமல் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் இதே போன்று திருச்சி கே சாத்தனூர் வடுகபட்டி பைபாஸ் சாலை பகுதியில் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் ( 24) என்பவரை கேகே நகர் போலீசார் கைது செய்து உள்ளனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.