நடந்து சென்றவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது..
திருச்சி, பொன்மலை கல்கண்டார்கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 23 ந்தேதி தன் வீட்டின் அருகே நடந்து சென்றார் அப்பொழுது பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே இவர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி இவரது சட்டை பையில் இருந்த ரூ.800 பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து மேல கல்கண்டார் கோட்டை அர்ஜுன் நகரை சேர்ந்த முருகேசன் (வயது 48) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் ரூபாய் 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி கல்லுக்குழி முதல் தெருவை சேர்ந்தவர் கோகுல் (வயது 23, ) டிரைவர். இவர் கடந்த 23 ந்தேதி முடுக்குப்பட்டி அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து முடுக்குப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் (வயது24 )என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுவனை தாக்கிய ஆட்டோ டிரைவர்
திருச்சி பொன்மலை, மோராய்ஸ் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் சன்ரா விக்டோரியா . இவரது மகன் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19ந்தேதி மாலை இந்த சிறுவன் கெ ாட்டப்பட்டு அருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவிற்கு இடையூறாக சென்றதாக கூறி ஆட்டோ டிரைவர் சிறுவனை சைக்கிளில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்மலை கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் (41 )என்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வெவ்வேறு சம்பவம்.. திருச்சியில் 2 இளம் பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சவுகத் அலி (வயது29) . இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் கடனில் கார் வாங்கி வாடகைக்கு ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 21ந்தேதி கார் ஓட்டச் சென்ற சவுக்கத் அலி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் திருச்சி மதுரை சாலை மசூதி தெருவை சேர்ந்தவர் ரியாசுதீன் (வயது 28. )இவரது மகன் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 23 ந்தேதி இவரது மனைவி மகனை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். இருவரும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் பாட்டி வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அவரது பாட்டி இறந்துவிட்டார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார் . இந்த நிலையில் கடந்த 23 ந்தேதி தன் உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த இளம் பெண் வீடு திரும்பவில்லை, எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை வாசன் நகரை சேர்ந்தவர் தினேஷ் ராஜா (வயது 39) இவர் கடந்த 11ந்தேதி தன் மோட்டார் சைக்கிளை ரெயில்வே ஜங்ஷன் அருகே நிறுத்திவிட்டு மதுரைக்கு சென்றார். அன்று இரவு திரும்பி இருந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரிந்தது. இதேபோல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மண்டல்கோட்டை சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 29) இவர் தென்னக ரெயில்வேயில், உதவி டிரைவராக வேலை செய்து வருகிறார் கடந்த மாதம் 29ந் தேதி தன் மோட்டார் சைக்கிளை ரெயில்வே ஜங்ஷன் அருகே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரிந்தது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி கொளஞ்சிபாடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது35. ) தென்னக ரெயில்வேயில் சரக்கு வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13 ந் தேதி தன் மோட்டார் சைக்கிளை ரெயில்வே ஜங்ஷன் அருகே நிறுத்தி விட்டு சென்றார். கடந்த 17 ந்தேதி வேலை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள்திருட்டு போனது தெரிந்தது. இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறித்து கன் டோன்மென்ட் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு வீரசிங்கம்பட்டியைச் சேர்ந்த ஆகஸ்டின் (வயது 54 )என்பவர் இந்த மூன்று மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் திருடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.