Skip to content

தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ரயில் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 51) இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணி முடித்துவிட்டு வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் பாம்பு கடித்து விட்டது, உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இவர் வரும்  வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தார் .

அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக இவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்பு பாம்பு கடித்த சம்பவம் குறித்து மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூங்கும் போது பாம்பு கடித்து ஒருவர், உயிரிழந்த சம்பவம் மறைமலைநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

error: Content is protected !!