தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள ஆர்எம்எச் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இன்று திராவிடத்தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட தலைவர் ரமேஷ், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி செல்வசுப்பிரமணி, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, ஆதி தமிழர் பேரவை சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்எம்எச் அருந்ததிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அருந்ததிய மக்களை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறுவதை கைவிட வேண்டும். அதே இடத்தில் தனித்தனி வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
