Skip to content

ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால்… பயணிகளை மீட்பது குறித்து ஒத்திகை

  • by Authour
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பயணிகளை பாதுகாப்பாக மீட்பது என ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பி1, பி2, பி3 என்ற மூன்று குளிர்சாதன பெட்டியும் ,ஒரு பொது பெட்டியும் கொண்ட நெல்லூர் விரைவு ரயில் 2000 பயணிகளை ஏற்றிகொண்டு சேலத்திலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்ததுபோது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவு ரயில் சென்றபோது ரயில் தடம் புரண்டதில் பி1, பி2 குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த 50 பேருக்கு படுகாயம் ஏற்பட்டோர் காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை குறைந்து 10 பேர் உயிரிழந்த நிகழ்வு தத்துரூபமாக காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ரயில்வே தெற்கு முதல் நிலை அலுவலர் கணேஷ் ,சென்னை கோட்ட கூடுதல் மேலாளர் ஸ்டேஜ் பிரதாப் சிங் மற்றும் சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை,தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் , தீயணைப்புத் துறையினர், ரயில்வே போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 10 ஆம்புலன்ஸ் தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் இரண்டு மோப்ப நாய்கள் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஒரு மோப்பநாய் என மூன்று நாய்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது குறித்து நடைபெற்ற ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக இருந்ததை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர்.
error: Content is protected !!