Skip to content

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார்…அன்புமணி!

  • by Authour

பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் சமீபத்தில் பேசிய ராமதாஸ் ” தாம் உயிருடன் இருக்கும் வரை, பாமகவுக்கு தாம்தான் தலைவர் என்று கூறினார். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தது போல, தாமும் பாமக தலைவராக இருப்பேன்” என்றும் ராமதாஸ் உறுதியாக தெரிவித்திருந்தார்.

அன்புமணி குறித்த கேள்விக்கு, ”அவர் தான் சொல்வது போல கேட்டாக வேண்டும். அன்புமணி செயல் தலைவராக மட்டுமே கட்சியில் நீடிப்பார். மு.க.ஸ்டாலின் இருந்தது போல, அன்புமணியும், கட்சிக்கு செயல் தலைவராக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம்என ராமதாஸ் திட்டவட்டமாக கூறினார்.

அது மட்டுமின்றி, எம்.எல்.ஏ அருள் எனக்கு துணையாக, என்னோடு தான் பயணிக்கிறார். இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கக் கூடிய மாநில தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப் போகிறார்கள். இவர்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். இவர்கள்தான் வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள் எனவும் பேசியிருந்தார். பிறகு அருளை எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கி அன்புமணி அறிக்கை வெளியிட மீண்டும் பாமக உட்கட்சி விவகாரம் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை பிரச்சினைக்கு பிறகு தந்தை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இப்போது தனது தந்தையும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “வயது முதிர்வு காரணமாக டாக்டர் ராமதாஸ் ஒரு குழந்தை போல மாறிவிட்டார், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்,” என்று அவர் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து பேசுகையில், “சி.வி.சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோதே கூட்டணி பற்றி பேசதான் வந்தார் என என்கிட்டே சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறேன்? நான் கேட்டபோது அழைப்பிதழ் வைக்க வந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் என்னிடம் கூறினார்” எனவும் அன்புமணி தெரிவித்தார்.

error: Content is protected !!