காதல் திருமணம் செய்த விவகாரத்தில், பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும், ஏடிஜிபி ஜெயராமும் சேர்ந்த ஒரு சிறுவனை கடத்திய வழக்கில், ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பூவை ஜெகன்மூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அங்கு முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
அவர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ரூ.25 ஆயிரம் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.