வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், அவர் பெங்களூரு பரப்பன அக்ரகார மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே அவர் அந்த சிறையில் இருந்தபோதிலும், சாகும்வரை ஆயுள் சிறை தண்டனைக்கு பிறகு அவர் சிறைக்கு கொண்டு வரப்பட்டபோது மிகவும் அழுத புலம்பியபடி இருந்தார். அவருக்கு கைதி எண் 15528 வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனைக்கான முதல் இரவை அவர் சிறையில் கழித்தார். கண்ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக சிறை மருத்துவர்கள் அன்று இரவு அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது, தனது வேதனைகளை மருத்துவர்களிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா கூறியுள்ளார்.
முன்னாள் எம்.பி. என்பதால் தற்போது அவர் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் கைதிகளுக்கு உரிய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். நேற்று காலை அவருக்கு அதிகாரப்பூர்வமாக கைதி எண் 15528 ஒதுக்கப்பட்டது. இந்த தகவல்களை அவர் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.