Skip to content

ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஜோன்றம்பள்ளி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரிக்கரையின் வழியாக சாலை அமைத்து தரப்படும் என போடப்பட்ட ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என தெரிவிக்கிறார்கள்.

மேலும் ஜோன்றம்பள்ளி பகுதியில் 150 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மாணவ மாணவிகள் மேல் நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் கொடுமாம்பள்ளி பகுதிக்கு செல்ல வேண்டும் அதற்கு இச்சாலையை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று இதுவரையிலும் செயல்படுத்தவில்லை என தெரிவிக்கிறார்கள்.

மேலும் அவ்வழியில் செல்லும்பொழுது அருகாமையில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கிய சாலையில் செல்லும் முதியோர்களும் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் மிகவும் ஆபத்தான நிலையில் சென்று வருகிறார்கள் என தெரிவிக்கிறார்கள்.

இச்சாலையில் டெண்டர் எடுத்தவர்களை வரச் சொல்லுங்கள் அவர்கள் இந்த வழியாக சென்று பார்க்கட்டும் அப்பொழுதுதான் எங்களுடைய கஷ்டம் என்னவென்று அவர்களுக்கு தெரியும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறி வருகிறார்கள்.

எனவே உடனடியாக குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ள சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தர வேண்டுமென நெல் பயிரை நட்டு நூதன முறையில் போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!