சென்னை மதுரவாயல் ருக்மணி நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (வயது 55). கார் டிரைவர். இவர் சென்னையை சேர்ந்த விஜயராகவன் மற்றும் குடும்பத்தினரை திருச்சிக்கு காரில் அழைத்து வந்தார் .திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்தனர். காரை ஓட்டல் அருகே கார் ஸ்டாண்டில் சிவசுப்பிரமணி நிறுத்தி இருந்தார். பின்னர் அந்த குடும்பத்தினர் மீண்டும் செல்வதற்காக கார் டிரைவர் சிவசுப்பிரமணிக்கு ஃபோன் அடித்தனர். ஆனால் இவர் போனை எடுக்கவில்லை. அங்கே சென்று பார்த்தபோது காருக்குள் மயங்கிய நிலையில் சிவசுப்பிரமணி கிடந்தார் .உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மகன் கதிர்குமரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..
- by Authour
