Skip to content

திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

திருநங்கை தூக்கு போட்டு தற்கொலை..

திருச்சி தாராநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளங்கோவன். (வயது 59). திருநங்கை. இந்த நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரி சுதா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்ற 2 பெண்கள்  கைது

திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர் .அங்கு கஞ்சா விற்றதாக கதீஜா, சம்சு நிஷா ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் கஞ்சா விற்றதாக புத்தூரை சேர்ந்த பாட்ஷா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சுமை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆமோதிராஜ். (வயது 47 ) இதய நோயாளி. கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி ரெஜினா மேரி கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!