Skip to content

மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

கொத்தனார் மாடியிலிருந்து தவறி விழுந்து சாவு…

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே உள்ள கனியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்( 33). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் நிலையில் நேற்று இவர் அரியமங்கலம் காமராஜர் நகர் அண்ணா தெரு பகுதியில் உள்ள முகமது ஆரிப் என்பவரது வீட்டில் 2வது மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று அவருக்கு வழிப்பு ஏற்பட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் இந்த சம்பவத்தில் செந்தில்குமார் தலையில் பலத்த காயம் அடைந்தார் இதை எடுத்து ஆபத்தான நிலையில் செந்தில்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மயங்கி விழுந்து ஒருவர் சாவு

திருச்சி இபி ரோடு தனியார் ஏடிஎம் சென்டர் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து போன ஆண் நபர் பெயர் சந்திரன் (60) என்பது மட்டும் தெரிய வந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!