ராஜஸ்தான் மாநிலம் நாகௌரில் உணவு வழங்கத் தாமதமானதால், அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த ராம்தாஸ் (40) என்பவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராம்தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
