சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா இன்று (27ம் தேதி) நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலைகளுக்கு வெள்ளிக்கவசத்தை வழங்கினார்.
பின்னர் நிருபர்களை சந்திப்பில் அவர் கூறியதாவது,
இன்றைய சூழ்நிலையில் எல்லா கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது அதிமுக பிரிந்து கிடக்கிறது, பாமக பிரிந்து கிடக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் திமுகவிற்கு தான் வாய்ப்பு இருக்கிறது. இது கண்கூடாக தெரிகிறது. திமுகவுக்கு ஏன் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல வேண்டும் இல்லையா? எல்லா கட்சிகளும் பிரிந்து இருக்கும் போது திமுகவே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பொதுமக்கள் பேசுகின்றனர், நான் பேசவில்லை. என் மீது பழியை போடாதீர்கள்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ஒரு நல்ல முடிவை தமிழக மக்கள் நலன் கருதி எடுக்க இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னமும் 6 மாதங்கள் இருக்கின்றன. எனவே எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.
மேலும் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்தித்து அனுதாபம் தெரிவித்து இருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

