சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்தும், தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வலியுறுத்தியும், தஞ்சையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டில் அரை கி.மீ தூரத்திற்கு கூட்டணி கட்சி தொண்டர்கள் அணிவகுத்து நின்று முழக்கமிட்டனர்.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சை எம்.பி முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்ட
தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் மத்திய அரசுக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழக்கமிட்டனர்
அரை கி.மீ தூரத்திற்கு கூட்டணி கட்சி தொண்டர்கள் அணிவகுத்து நின்று முழக்கமிட்ட கழுகு பார்வை காட்சி.

