தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 12-ஆம் வகுப்பு மாணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவரை, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த +2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து, மாணவரை தாக்கிய 15 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கும்பகோணம்- +1 மாணவர்கள் தாக்கி +2 மாணவன் பலி.. 15 மாணவர்கள் கைது
- by Authour

