Skip to content

கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சணப்பிரட்டி அருகே உள்ள ஆர்.எஸ். புதூர் சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக பசுபதிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் சந்தேகத்திற்கு இடமான முறையில் கிடந்ததால், இது விபத்தா அல்லது யாராவது கொலை செய்து உடலை எரித்து வீசியார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தடயங்கள் ஏதும் உள்ளதா, சம்பவம் நடந்த நேரம் எது, இறந்த நபரின் அடையாளம் குறித்து தகவல்கள் கிடைக்குமா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அடையாளம் தெரியாத ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!